×

அரியாங்குப்பத்தில் சோகம் மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை

 

புதுச்சேரி, மே 6: விழுப்புரம் ரங்கசாமி லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் விஜயபிரியகுமார் (47). இவர் பல் மருத்துவம் 3ம் ஆண்டு படித்து கொண்டிருந்தபோது மனநோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து அவர், கடந்த 9 ஆண்டுகளாக புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள மனநல மையத்தில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். அவரை உறவினர்கள் அவ்வப்போது வந்து பார்த்து செல்வது வழக்கம்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் விஜயபிரியகுமாரின் சித்தப்பா ராமகிருஷ்ணன் மனநல மையம் வந்து அவரை பார்த்து பேசிவிட்டு சென்றார். அவர் வந்து சென்ற சிறிதுநேரத்தில் விஜயபிரியகுமார் 2வது மாடிக்கு சென்று, அங்கிருந்து கீழே குதித்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜிப்மருக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.  இது குறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post அரியாங்குப்பத்தில் சோகம் மாடியில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை appeared first on Dinakaran.

Tags : Ariankuppam ,Puducherry ,Vijayapriyakumar ,Villupuram Rangasamy Layout ,Arianguppam Manaveli ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை